புரோ கபடி போட்டி : பாட்னாவை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ் அணி

புரோ கப்டி லீக் போட்டியில் பாட்னா பைரட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது.
புரோ கபடி போட்டி : பாட்னாவை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ் அணி
x
6-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கியது.  இதில் முதல் ஆட்டத்தில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, பர்தீப் நார்வால் தலைமையிலான பாட்னா பைரட்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் அணியை 42-26 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தியது.தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாகூர் அதிகபட்சமாக 14 புள்ளிகளை எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.


Next Story

மேலும் செய்திகள்