டிவிட்டரிலிருந்து விலகிய சானியா மிர்சா...

இந்தியா, பாகிஸ்தான் போட்டிகள் நடைபெறுவதால், டிவிட்டரிலிருந்து கொஞ்ச நாள் விலகி இருக்க முடிவு எடுத்துள்ளதாக சானியா தெரிவித்துள்ளார்.
டிவிட்டரிலிருந்து விலகிய சானியா மிர்சா...
x
* இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது என்றால் அதனால் பாதிக்கப்படுவது டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தான்.  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாயிப் மாலிக்கை திருமணம் சானியா மிர்சா செய்தார். இதனால் சானியா மிர்சா மீது சிலர் சமூக வலைத்தளத்தில் கடுமையான விமர்சனங்களை முன் வைப்பது வாடிக்கையாகி விட்டது. 

* இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடந்தால், நீங்கள் யாருக்கு ஆதரவு அளிக்கப்போகிறீர்கள் என்று சிலர் சானியாவிடம் வம்பிழுப்பர். இந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான் போட்டிகள் நடைபெறுவதால், டிவிட்டரிலிருந்து கொஞ்ச நாள் விலகி இருக்க முடிவு எடுத்துள்ளதாக சானியா தெரிவித்துள்ளார். 

* தம்மை வம்பிழுக்க நிறைய பேர் வருவார்கள் என்பதால், கர்பினியாக இருக்கும் போது மன அமைதி தேவை என்பதை சுட்டிக்காட்டி இந்த முடிவைஎடுத்துள்ளதாக சானியா மிர்சா கூறியுள்ளார். விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் என்றும் சானியா மிர்சா அறிவுரை வழங்கியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்