காவல்துறையினருக்கான விளையாட்டு போட்டி - 615 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

8 ஆம் தேதி வரை நடைபெற உள்ள போட்டிகளை, மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூலு துவக்கி வைத்தார்.
காவல்துறையினருக்கான விளையாட்டு போட்டி - 615 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
x
திருச்சியில், நடைபெற்ற தமிழக காவல்துறைக்கான 58 வது குழு விளையாட்டு போட்டிகளில், 615 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். காவல்துறையினருக்கு புத்துணர்வு, மன அழுத்தத்தை குறைத்திடும் வகையில், அண்ணா விளையாட்டரங்கில் காவல்துறையினருக்காக, கபடி, கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. வருகிற 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ள போட்டிகளை, மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூலு துவக்கி வைத்தார்.  நிகழ்ச்சியில், மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், எஸ்.பி.ஜியா உல்ஹக், டிஐஜி லலிதா லட்சுமி உள்ளிட்ட காவல்துறையினர் பங்கேற்றனர். 


Next Story

மேலும் செய்திகள்