செஸ் மற்றும் பாக்சிங் இரண்டும் கலந்த ஓர் விளையாட்டு

செஸ் பாக்ஸிங்.. செஸ் போட்டியையும், பாக்ஸிங் போட்டியையும் ஒன்று சேர்த்த விளையாட்டு...
செஸ் மற்றும் பாக்சிங் இரண்டும் கலந்த ஓர் விளையாட்டு
x
செஸ் பாக்ஸிங்..செஸ் போட்டியையும், பாக்ஸிங் போட்டியையும் ஒன்று சேர்த்த விளையாட்டு..அதாவது ஒரே சமயத்தில், உடல் வலிமையையும், புத்தி கூர்மையையும் சோதிக்கும் ஓர் விசித்திர விளையாட்டு.நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Iepe Rubingh என்பவர் இந்த விளையாட்டை கண்டுபிடித்தார். பெர்லின் நாட்டில் 2003 ஆம் ஆண்டு முதல் முதலாக இந்த போட்டி நடத்தப்பட்டது. 
தற்போது இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா என பல நாடுகளில் இந்த விளையாட்டு பிரபலம்..செஸ் பாக்ஸிங் போட்டியில் மொத்தம் 11 சுற்றுகள் , ஒவ்வொரு சுற்றுக்கும் மூன்று நிமிடங்கள்... முதல் சுற்று செஸ் போட்டி, இரண்டாவது சுற்று பாக்ஸிங்...  என, மாறி மாறி, இறுதியாக செஸ் போட்டியில் ஆட்டம் முடிவடையும்.மொத்தம் ஆறு செஸ் சுற்றுகள் , 5 சுற்றுகள் பாக்ஸிங் சுற்றுகள் நடைபெறும்..செஸ் சுற்றுக்கு பின், மேடையில் இருக்கும் செஸ் போர்டு உடனடியாக அகற்றப்பட்டு, பாக்ஸிங் நடைபெறும்... அதில் ஏற்படும் காயங்களை பொருட்படுத்தாமல் உடனடியாக வீரர்கள் அடுத்த செஸ் சுற்றுக்கு தயாராகவேண்டும்... செஸ் சுற்றின்போது, வீரர்களின் கவனம் சிதறாமல் இருக்க, காதில் இசைக்கருவி பொருத்தப்படும்.பாக்சிங் சுற்றின்போது, நாக் அவுட் முறையில் வீழ்த்தினாலும், செஸ் போட்டியின்போது செக்மேட் வைத்தாலும் சிறப்பு புள்ளிகள் கொடுக்கப்படும்.
 
கடந்த 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக செஸ் பாக்சிங் சேம்பியன்ஷிப் போட்டியில், லைட் ஹெவி வெயிட் பிரிவில், இந்தியாவின் சைலேஷ் திரிபதி முதலிடம் பிடித்தார். மேலும், லைட் வெயிட் மற்றும் மிடில் வெயிட்  பிரிவுகளில் வீ.சதீஸ் , பன்டம் வெயிட் பிரிவில், நவீன்குமார், ஆகிய இந்திய வீரர்கள் உலகின் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்