குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்கள் - அணியின் சீருடையில் வந்து கால்பந்து ஆடினர்
தாய்லாந்தில், பயிற்சியாளருடன் சுற்றுலா சென்றபோது தாம் லூங் குகையில் சிக்கிய சிறுவர்கள் 12 பேர், 17 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர்.
தாய்லாந்தில், பயிற்சியாளருடன் சுற்றுலா சென்றபோது தாம் லூங் குகையில் சிக்கிய சிறுவர்கள் 12 பேர், 17 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர்கள், வீடு திரும்பினர். சிறுவர்களும், பயிற்சியாளரும் நல்ல உடல்நிலையில் உள்ளனர். இந்த நிலையில் சிறுவர்கள் அனைவரும் முதல்முறையாக, செய்தியாளர்கள் முன்பு தோன்றினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ''முன்னோக்கி செல்லும் தாய்லாந்து'' என பெயரிடப்பட்டது.
சிறுவர்கள் தங்களது கால்பந்து அணி உடையில் கால்பந்து விளையாடியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Next Story