உலக கோப்பை 2வது அரையிறுதி ஆட்டம் - குரோஷியா வெற்றி பெறும் என புலி கணிப்பு

இன்று நடைபெற இருக்கும் இங்கிலாந்து மற்றும் குரேசியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், குரேஷியா வெற்றி பெறும் என ரஷ்ய புலியின் கணிப்பு.
உலக கோப்பை 2வது அரையிறுதி ஆட்டம் - குரோஷியா வெற்றி பெறும் என புலி கணிப்பு
x
குரோஷியா வெற்றி பெறும் என புலி கணிப்பு



இன்று நடைபெற இருக்கும் இங்கிலாந்து மற்றும் குரேசியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், குரேஷியா வெற்றி பெறும் என ரஷ்ய புலியின் கணிப்பில் தெரிய வந்துள்ளது. ரஷ்யாவில் உள்ள விலங்கியல் பூங்காவில், இங்கிலாந்து மற்றும் குரோஷியா நாட்டின் இரு  தேசிய கொடிகளுடனான பெட்டிகள் மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தன. இதில் முதலில் குரோஷியாவின் தேசிய கொடி அடங்கிய பெட்டியை  புலி இழுத்ததன் மூலம் குரோஷிய அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

குரோஷியா அணியை வீழ்த்துமா இங்கிலாந்து? - கீரிகளின் கணிப்பு வெற்றி பெறுமா?



இன்று நடைபெற இருக்கும் இங்கிலாந்து மற்றும் குரேசியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், இங்கிலாந்து வெற்றி பெறும் என கீரிகளின் கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு கால்பந்து போட்டிகளில் மோதும் அணிகளில் எது வெற்றி பெறும் என பல்வேறு விலங்குகள் மூலம் கணிக்கப்படுகின்றன. இந்நிலையில்,இங்கிலாந்தில் உள்ள விலங்கியல் பூங்காவில், இங்கிலாந்து மற்றும் குரேசியா நாட்டின் இரு  தேசிய கொடிகளுடன் அருகே உணவுகள் வைக்கப்பட்டன. இதில் முதலில் இங்கிலாந்து கொடி அருகே  உள்ள உணவை கீரிகள்  உட்கொண்டன. இதன் மூலம் இங்கிலாந்து அணி இன்று வெற்றி பெறும் என்று இங்கிலாந்து ரசிகர்கள் நம்புகின்றனர்.

உலக கோப்பை 2வது அரையிறுதி ஆட்டம் - குரோஷியா வெற்றி பெறும் என ஒட்டகம் கணிப்பு



இதற்கிடையே, உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் குரோஷியா வெற்றி பெறும் என்று ஓட்டகம் ஒன்று கணித்துள்ளது. தஜ்கிஸ்தானில் உள்ள சரணலாயத்தில் மரியா என்ற ஓட்டகம், 2வது அரையிறுதி ஆட்டத்தில் குரோஷியாவை வெற்றியாளராக தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே இந்த ஓட்டகம் 2 போட்டிகளின் வெற்றியாளர்களை சரியாக தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.  


Next Story

மேலும் செய்திகள்