கபடி மாஸ்டர்ஸ் தொடர் - சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா
துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அஜய் தாக்கூர் தலைமையிலான இந்திய அணியும், ஈரானும் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்தே இந்திய வீரர்கள் அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளை குவித்தனர். இறுதியில் 44 க்கு 26 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வீழ்த்தி, இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.