ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இங்கிலாந்து அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது

ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இங்கிலாந்து அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இங்கிலாந்து அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது
x
நாட்டிங்காம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி  50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் குவித்தது. அந்த அணியின் துவக்க பேர்ஸ்டோவ் 139 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்147 ரன்கள் அடித்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற புதிய உலக சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 37 ஓவர்களில் 239 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இங்கிலாந்து அணி 242 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்