மகளிருக்கான ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் - 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

மகளிருக்கான ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில், மலேசியாவை 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
மகளிருக்கான ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் - 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
x
கோலாலம்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மித்தாலி ராஜ் 97 ரன்கள் குவித்தார். இதனையடுத்து களமிறங்கிய மலேசிய அணி 27 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. 97 ரன்கள் குவித்த மித்தாலி ராஜ் ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்