45 வயதிலும் மாரத்தான் போட்டிகளில் கலக்கும் கலைமணி..

கோவையில் டீக்கடை நடத்தி வரும் கலைமணி என்ற பெண், மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகிறார்.
45 வயதிலும் மாரத்தான் போட்டிகளில் கலக்கும் கலைமணி..
x
கோவை செல்வபுரத்தை சேர்ந்த கலைமணி தமது கணவருடன் டீக்கடை நடத்தி வருகிறார். விளையாட்டின் மீது இருக்கும் ஆர்வத்தால் தமது 45 வயதிலும் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். திருமணத்திற்கு பிறகு கணவர்
கொடுத்த ஊக்கத்தால்  4 தங்கப் பதக்கம் உட்பட 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.சாதனைக்கு வயது தடையில்லை என்றும் பெண்கள் உடற்பயிற்சி மேற்கொண்டு உடலை திடமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்