"விநாயகர் சதுர்த்திக்கு முதல்வர் வாழ்த்து தெரிவிக்காத‌து ஏன்?" - எச்.ராஜா கேள்வி

x

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்டால் பாராட்டப்படும் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா தெரிவித்துள்ளார். சொக்கலிங்கபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் சேகர்பாபு கொள்கை அடிப்படையில் கூறியுள்ளது போன்று, அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து நிலங்களும் மீட்கப்பட்டால், அவருடைய செயல்பாட்டுக்கு பாராட்டு தெரிவிக்கப்படும் என்றார். மேலும், அனைத்து பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவிக்கும் முதல்வர், விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்காத‌து ஏன் என்று கேள்வி எழுப்பிய எச் ராஜா, முதல்வருக்கு கண்டனம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்