கோவிலுக்கு வந்த விஜய பிரபாகரன்... ஓடோடி வந்த மக்கள் வைத்த கோரிக்கை... - தட்டாமல் கொடுத்த வாக்கு..!

x

தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரத்தில் உள்ள தனது குலதெய்வ கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அப்பகுதி மக்களை விஜய பிரபாகரன் சந்தித்தபோது, தங்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். மேலும், புரட்டாசி சனிக்கிழமை தோறும், கோயிலில் அன்னதானம் செய்யுமாறும் விஜய பிரபாகரனிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்டு, கண்டிப்பாக செய்வதாக விஜய பிரபாகரன் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்