"அரசியல்வாதிகளின் பணம் எங்குள்ளது என அதிகாரிகளுக்கு.." -பரபரப்பு தகவலுடன் விக்கிரமராஜா எச்சரிக்கை

x

அரசியல்வாதிகள் எங்கு பணம் வைத்திருக்கிறார்கள் என்பது அதிகாரிகளுக்கு நன்றாக தெரிந்தும் அவற்றை பறிமுதல் செய்யாமல் வியாபாரிகளிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்ய வேண்டாம் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்ரமராஜா விமர்சித்துள்ளார்... திருவண்ணாமலை தாலுகா வணிகர் சங்கத்தின் 38வது ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்தார்... மேலும், தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து இது குறித்து முறையிடப் போவதாகவும், உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தை வணிகர் சங்கம் அறிவிக்கும் எனவும் விக்கிரம ராஜா எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்