வேலூர் மக்களவைத் தொகுதியில் ஏ.சி.சண்முகம் செய்த நலத்திட்ட பணிகளை விளக்கிக்கூறி பிரச்சாரம் !

x

வேலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக, அக்கட்சியின் செயல் தலைவர் ரவிக்குமார் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். மார்க்கெட் பகுதியில் கடை கடையாக, கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சென்று துண்டறிக்கைகளை வழங்கி வாக்கு சேகரித்தார். ஏ.சி.சண்முகம் செய்த நலத்திட்டங்களை எடுத்துக்கூறி ரவிக்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும், வேலூர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் இலவச மண்டபம் கட்டித் தரப்படும், ஆண்டுதோறும் 600 மாணவர்களுக்கு தன்னுடைய கல்லூரியில் இலவசமாக சீட் கொடுத்து படிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ள வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் விளக்கி வாக்கு சேகரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்