"தேர்தலின் போது மட்டும் தான் மகளிர் தினம் வருகிறதா?" - பிரதமருக்கு கேள்வி எழுப்பிய ஜவாஹிருல்லா

x

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பிரச்சாரம் மேற்கொண்டார். ஆம்பூர் நகர பகுதிக்கு உட்பட்ட கஸ்பா, மந்தகரை, மளிகை தோப்பு, காதர்பேட்டை, ரெட்டி தோப்பு, புதுமனை உள்ளிட்ட பகுதிகளில் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டும் தான் மகளிர் தினம் வருகிறது... ஏன் தேர்தலின் போது மட்டும் கேஸ் விலையை பிரதமர் குறைக்கிறார்... என கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்