வசந்த குமார் பிறந்த நாள்.. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நினைவிடம்.. விஜய் வசந்த் மரியாதை

x

காங்கிரஸ் முன்னாள் எம்.பி மறைந்த வசந்த குமாரின் 74வது பிறந்த நாள் விழா இன்று காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் பகுதியில் உள்ள வசந்த குமார் நினைவிடத்தில் உள்ள மணி மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவரது மகனும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய காங்கிரஸ் வேட்பாளருமான விஜய்வசந்த் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் வசந்த குமார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வசந்த குமாரின் மனைவி தமிழ் செல்வி மற்றும் குடும்பத்தினர், காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார், நாகர்கோயில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்...


Next Story

மேலும் செய்திகள்