உபி -யில் கசிந்த 12ம் வகுப்பு வினாத்தாள்... சரமாரியாக கேள்வி எழுப்பிய பிரியங்கா காந்தி

x

உத்தரப்பிரதேசத்தில் 12ம் வகுப்பு தேர்வு வினாத்தாள் கசிந்த நிலையில், கோடிக்கணக்கான இளைஞர்களின் அஸ்திவாரத்தை பா.ஜ.க அழிப்பதாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில், 12ம் வகுப்பு கணிதம் மற்றும் உயிரியல் தேர்வுகளின் வினாத்தாள்கள் வாட்ஸ் அப் குழுக்களில் நேற்று கசிந்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, பரீட்சை மாஃபியாவையும், ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஊழல்வாதிகளையும் காப்பாற்ற நினைப்பதாகவும், மாநிலக் குழந்தைகள் நல்ல கல்வியைப் பெற்று எதிர்காலத்தை மேம்படுத்துவதை பா.ஜ.க விரும்பவில்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்