"பணம் கொடுத்து கூட்டி வருவதால் மக்களுக்கு பலன் ஏதுமில்லை" - அதிமுக மாநாடு - டிடிவி கடும் விமர்சனம்

x

ஆடம்பரமாக பணம் கொடுத்து கூட்டி வந்து மாநாடு நடத்துவதால் மக்களுக்கு பலன் ஏதுமில்லை என அம‌முக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். சிவகங்கையில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை அதிமுக மாநாட்டுக்காக 300 கோடி ரூபாய் முதல் 400 கோடி ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக பலர் கூறுகின்றனர் என்று தெரிவித்தார். வெற்று விளம்பரத்திற்காக ஆடம்பரமாக செலவு செய்து மாநாடு நடத்துவதாக தெரிவித்த டிடிவி தினகரன், பணம் கொடுத்து மக்களை கூட்டி வருவதால் மக்களுக்கும், அவர்களுக்கும் பலனில்லை என்றார்.


Next Story

மேலும் செய்திகள்