"இருக்கை தந்த இறுக்கம்..." பட்ஜெட்-க்கே ஆப்சென்ட் ..! நாளை வருவாரா ஓ.பி.எஸ்?

x

சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டது. இதுவரை அந்த இருக்கையில் அமர்ந்திருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வதுக்கு இரண்டாவது வரிசையில் 207A இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருக்கை மாற்றம் செய்யப்பட்ட பின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். இருக்கை மாற்றம் செய்ததால் எந்த கவலையும் இல்லை என அவர் தெரிவித்திருந்த போதிலும், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட இன்றைய தினமும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை.


Next Story

மேலும் செய்திகள்