திடீரென குழம்பிப்போன உதயநிதி - கூட்டத்தில் இருந்து வந்த கோஷம்

x

திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து காட்டூர் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது, பெண் ஒருவர் செல்ஃபி எடுக்க வேண்டும் எனக் கூறிய நிலையில், அந்த பெண்ணின் செல்போனை வாங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களுடன் செல்ஃபி எடுத்தார். தொடர்ந்து பிரசாரத்தில் பேசிய அவர், தீப்பெட்டி சின்னம் என்று கூறுவதற்கு பதிலாக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு பேசினார். அப்போது மக்கள் தீப்பெட்டி சின்னம் என கோஷமிட்ட நிலையில் சுதாரித்த உதயநிதி மன்னிப்பு கோரினார்.


Next Story

மேலும் செய்திகள்