"மணல் திருட்டை தடுத்து டெல்டாவை காப்போம்"- உறுதி மொழி எடுத்த செந்தில்நாதன்

x

இனி வரும் காலங்களில் காவிரி டெல்டா பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை முழுமையாக தடுப்பேன் என திருச்சி தொகுதி அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் வாக்குறுதி அளித்துள்ளார். மணல் கொள்ளையை தடுப்போம் என திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உறுதி மொழி எடுத்த பின் செந்தில்நாதன் தனது வாக்கு சேகரிப்பை தொடங்கினார். அரசியலுக்கு அப்பாற்பட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து காவிரியை டெல்டாவை காப்போம் என அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்