தமிழக அரசு மீது ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு | thoothukudi | gk vasan

x

தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்பில் தமிழக அரசு முறையான கடமைகளை செய்யவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் குற்றம்சாட்டி உள்ளார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் த.மா.கா. சார்பில் போட்டியிடும் எஸ்.டி.ஆர். விஜயசீலனை ஆதரித்து தூத்துக்குடி முத்தையாபுரத்தில் சைக்கிள் ஓட்டி ஜி.கே.வாசன் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து அவர் தொண்டர்களிடையே பேசும்போது, தூத்துக்குடியில் மழை வெள்ளம் வரும் என்று முன்கூட்டியே தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தவறிவிட்டார்கள் எனவும், மழைக்கு பின்பும் முறையான கடமைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்