"இந்தியாவிற்கு மோடி கேரண்டி தொகுதிக்கு நான் கேரண்டி.." - தீவிர பிரச்சாரத்தில் பாஜக வேட்பாளர்

x

திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பசுங்கரை, வேளானந்தல், பெருங்குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றும், நமது நாடு, நம் மக்கள், இளைஞர்கள், அடுத்த தலைமுறை முன்னேற அனைவரும் தாமரைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று அஸ்வத்தாமன் கேட்டுக் கொண்டார். வருகின்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், தொகுதி வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் வாக்கை வீணாக்காமல் தாமரைச் சின்னத்திற்கு செலுத்த வேண்டுகோள் விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்