கிளம்பியதும் தங்கியிருந்த வீட்டில் ரெய்டு.. திருமாவளவன் கொடுத்த கூல் ரியாக்சன்

x

கடலூரில் விசிக தலைவர் திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில், வருமான வரித்துறையினர் திடீர் சோதனையை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் தொகுதி வேட்பாளரான திருமாவளவன், பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். இதற்காக, சி.தண்டேஸ்வரநல்லூர் பகுதியில் உள்ள விசிக நிர்வாகி முருகானந்தம் என்பவரது வீட்டில் தங்கி, பிரசாரத்தை தொடர்ந்து வந்தார். இந்நிலையில், நேற்று அந்த வீட்டிற்குள் புகுந்த 5 வருமான வரித்துறை அதிகாரிகள், திடீர் சோதனையை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் எந்தவித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் முருகானந்தம் நேரில் ஆஜராகுமாறு, வருமானவரித்துறையினரால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்