"இவர்கள் இரண்டும் சேர்ந்தது தான் பாசிசம்".. மத்திய அரசை சாடிய திருமாவளவன்

x

சனாதனமும், கார்ப்பரேட்டும் கை கோர்த்து, மத்தியில் ஆட்சி நடத்தி வருவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். தஞ்சாவூரில் சிபிஐ - எம்.எல். சார்பில், வீழ்க பாசிசம் வெல்க இந்தியா என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய திருமாவளவன், சனாதனமும், கார்ப்பரேட்டும் கைகோர்த்து ஆட்சி நடத்தி வருவதன் பெயரே பாசிசம் எனவும் கூறினார். மோடி அரசை தூக்கி எறியவே இந்தியா கூட்டணி உருவாகியுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்