"அடுத்த பிரதமர் மம்தா பானர்ஜி" - இந்தியாகூட்டணியில் கிளம்பிய புது புயல்

x

அடுத்த பிரதமராக, மேற்கு வங்க முதலமைச்சர் ம‌ம்தா பானர்ஜி வர வேண்டும் என, திரினாமூல் காங்கிரஸ் எம்.பி. சத்ருகன் சின்கா கூறியுள்ளார்

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி இருப்பாரா என்ற கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். குடியரசுத் தலைவராக ஒரு பெண் இருக்கும் நிலையில், பிரதமராகவும் ஒரு பெண் வர வேண்டும் என்றும், பலம் வாய்ந்த தலைவராக உள்ள ம‌ம்தா பானர்ஜி அந்த இடத்தை நிரப்புவார் என்றும் சத்ருகன் சின்கா கூறினார். தேசத்தின் எதிர்காலத்திற்காக இளைஞர்களின் அடையாளமாக ராகுல்காந்தியும், நவீன காலத்தின் சாண‌க்கியனாக சரத் பவாரும், இந்தியா கூட்டணியில் இருப்பதாக சத்ருகன் சின்கா தெரிவித்துள்ளார். இவர், 4 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகி திரினாமூல் காங்கிரசில் இணைந்தவராவார்.


Next Story

மேலும் செய்திகள்