கலைஞர் கோட்டம் முன் நின்ற மக்களிடம் சென்று சலிக்காமல் மனுக்களை வாங்கிய முதல்வர் | CM Stalin

x

திருவாரூர் அருகே அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். டெல்டா மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் 4 நாள் சுற்றுலா பயணம் சென்றுள்ளார். நிகழ்வின் மூன்றாவது நாளான நேற்று, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். இதனைத் தொடர்ந்து, திருவாரூர் அருகேயுள்ள கலைஞர் கோட்டத்தை அவர் பார்வையிட்டார். மேலும், அங்கிருந்த மக்களிடம் மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார். இந்நிலையில், இன்று காலை திருவாரூரில் நடைபெறவுள்ள நாகை எம் பி. செல்வராஜ் மகளின் திருமண விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்