ஷோரூமில் திருடன் தூக்கிய சொகுசு கார்...நடுரோட்டில் காத்திருந்த ஆப்பு

x

தஞ்சை அருகே வல்லம் புது சேத்தி பகுதியில் தனியார் கார் கம்பெனி ஷோரூமில் இருந்து திருடன் சொகுசு கார் ஒன்றைத் திருடிச் சென்ற நிலையில், கார் பெட்ரோல் இல்லாமல் நடுரோட்டில் நின்றதால் திருடன் வசமாக சிக்கினார்... கார் நின்ற இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் திருடனைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் திருடன் கும்பகோணம் மொட்ட கோபுரம் மூர்த்தி செட்டித் தெருவை சேர்ந்த ஹரிபிரசாத் என்பது தெரிய வந்தது... மீட்கப்பட்ட காரின் மதிப்பு ரூபாய் 10 லட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது..


Next Story

மேலும் செய்திகள்