``தாமரை மலர்ந்தால் - தமிழ்நாடு வளரும்''BJP வேட்பாளர் பால்கனகராஜை ஆதரித்து நமிதா பேச்சு

x

``தாமரை மலர்ந்தால் - தமிழ்நாடு வளரும்''BJP வேட்பாளர் பால்கனகராஜை ஆதரித்து நமிதா பேச்சு

வடசென்னை பாஜக வேட்பாளர் பால்கனகராஜை ஆதரித்து, பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான நமிதா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இன்றைய தினம் திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய நமிதா, பால்கனகராஜுக்கு வாக்கு அளித்தால் அவர் 24 மணி நேரமும் தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகள் செய்வார் எனவும், தாமரை மலர்ந்தால், தமிழ்நாடு வளரும் எனவும் கூறினார். பிரச்சாரத்தின் போது திரளான பாஜக தொண்டர்கள் உடனிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்