பிரச்சாரத்துக்கு சென்ற தமிழச்சி தங்கபாண்டியனின் வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

x

சென்னை திருவல்லிக்கேணியில், தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனின் பிரச்சார வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. திருவல்லிக்கேணி பாரதிதாசன் நகரில் உள்ள PM தர்கா தெருவில் உள்ள குடியிருப்புகள் இடிந்து இருப்பதால், வீடுகளை மாற்றி கட்டித்தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், மக்களவை தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க பிரச்சார வாகனத்தில், தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சென்றார். அப்போது, பிர‌ச்சார வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்