தெலுங்கானா தேர்தல் - தமிழக எம்.பி. திருநாவுக்கரசருக்கு வந்த உத்தரவு

x

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி பார்வையாளராக திருநாவுக்கரசர் எம்பி நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநில சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.கடந்த 10 ஆண்டுகளாக அங்கு ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை சாதகமான சூழல் நிலவுவதால், ஆட்சியை கைப்பற்ற தீவிர முனைப்பு காட்டி வருகிறது.இந்நிலையில் தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் பார்வையாளராக தமிழகத்தை சேர்ந்த எம்.பி. திருநாவுக்கரசரை நியமித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உத்தரவிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்