புயல்-வெள்ள பாதிப்பு.. "முதல்வர் அறிக்கை".. மத்திய ஆய்வு குழு சொன்ன தகவல்

x

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்த மத்திய குழுவினர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். பின்னர், ரிப்பன் கட்டிடத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையத்தினை பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய குழுவின் தலைவர் குணால் சத்யாத்திரி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நன்றாக உள்ளதாக குறிப்பிட்டார். முதல்வர் ஸ்டாலின் புயல், வெள்ள பாதிப்புகள் குறித்து தங்களிடம் அறிக்கை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வருங்காலங்களில் வெள்ள பாதிப்பை குறைக்கவும், சென்னையை மறுகட்டமைப்பு செய்யவும் திட்டம் வகுப்பதற்காக, தமிழ்நாடு அரசுடன் ஆலோசனையில் இருப்பதாகவும் குறிப்பிட்ட குணால் சத்தயார்த்தி, புயல்- வெள்ள பாதிப்புகள் குறித்த விரைவில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்