"அதிமுக வெற்றி பெற்று வந்தால்தான் தமிழ்நாடு காப்பாற்றப்படும்" - எடப்பாடி பழனிசாமி

x

சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸை ஆதரித்து காரைக்குடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ஜெயல‌லிதா இருந்த போதும், இறந்த பிறகும் சிறப்பான ஆட்சியை அதிமுக த‌ந்த‌தாக கூறினார். ஆனால், தற்போது தமிழ்நாட்டு மக்கள் வஞ்சிக்கப்படுகின்ற சூழல் நிலவுவதாகவும், அதிமுக வெற்றி பெற்றால்தான் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்