"சிறையில் 3 முறை கீழே விழுந்து விட்டார்; எழுந்து நிற்க முடியாமல் செந்தில் பாலாஜி அவதி.."

x

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது...

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு, சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

அவரை நீதிமன்ற காவலில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை எனவும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரிக்க, முதன்மை அமர்வு நீதிமன்றமும், சிறப்பு நீதிமன்றமும் மறுத்த நிலையில், இது சம்பந்தமாக விளக்கம் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, சிறையில் செந்தில் பாலாஜி 3 முறை நிற்க முடியாமல் கீழே விழுந்து விட்டதாகவும், மற்றவர் துணை இல்லாமல் அவரால் நீண்ட நேரம் அமர்ந்தோ எழுந்து நிற்கவோ முடியாது என்பதால்,

அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஜாமின் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்பது குறித்து மட்டுமே உத்தரவு பிறப்பிக்க முடியும் எனத் தெரிவித்த நீதிபதிகள்,

மத்திய அரசால் முதன்மை அமர்வு நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றமாக அறிவிக்கப் பட்டுள்ளதால், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை, முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு என்பதால், மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்