கட்சி நிர்வாகிகளுக்கு விழுந்த சரமாரி திட்டு..டென்ஷனில் கிளம்பிய அமைச்சர் பொன்முடி - விழுப்புரத்தில் பரபரப்பு

x

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே நடைபெற்ற விழாவில், கட்சி நிர்வாகிகளை அமைச்சர் பொன்முடி ஒருமையில் திட்டினார். திருச்சிற்றம்பலம் பகுதியில் தூய்மைப் பணியாளர்களுக்கு மின்கல வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இந்நிலையில், விழா ஏற்பாடுகள் சரியாக செய்யப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டிய அமைச்சர் பொன்முடி, கட்சி நிர்வாகிகளை ஒருமையில் திட்டிவிட்டுச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்