"சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும்... ஏற்ற தாழ்வு.." ஆளுநர் பரபரப்பு பேச்சு

x

சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசுவாமிகள் சன்னியாசம் பெற்ற 50வது ஆண்டு விழா சென்னை அடையாறில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, போர், காலநிலை மாற்றம் என அழிவை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கக் கூடிய சூழலில், பாரதம் தற்போது விழித்துள்ளதாக குறிப்பிட்டார். பாரதம் சனாதனத்தால் கட்டமைக்கப்பட்டது என்றும், உலக நாடுகள் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கினாலும், பாரதம் பொருளாதார வளர்ச்சியோடு பீடு நடை போடுவதாகவும் தெரிவித்தார். சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும் என அரவிந்தர் குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஆளுநர், சனாதான தர்மம் எந்த ஒரு ஏற்ற தாழ்வையும் வலியுறுத்தவில்லை என கருத்து தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்