திமுக நிர்வாகிகளுக்கு பறந்த எச்சரிக்கை..! ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் அதிரடி

x

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில், சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் கே.என் நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். சேலம் திமுக நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து சுமார் 2 மணி நேரங்களுக்கு மேலாக ஆலோசனை நடத்தியது.அப்போது, சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக தொடர்ச்சியாக வெற்றி பெறுவது எப்படி? என நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பினர். ஒரு சில திமுக நிர்வாகிகள் அதிமுகவினருடன் இணைந்து செயல்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வருவதாகவும், புகார்கள் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்