ஆர்.எஸ். பாரதி பேச்சுக்கு - ஆளுநர் பரபரப்பு ட்வீட்

x

நாகாலாந்து மக்கள் குறித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் கருத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நாகாலாந்து மக்கள் துணிச்சலான, நேர்மையான, கண்ணியமிக்கவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்களை நாய் மாமிசம் சாப்பிடுபவர்கள் என்று ஆர்.எஸ்.பாரதி இழிவுபடுத்தி பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமைப்படும் ஒரு சமூகத்தை ஆர்.எஸ்.பாரதி காயப்படுத்தக் கூடாது என்றும் ஆளுநர் ரவி வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்