மேடையில் ரஜினியின் மாஸ் பஞ்ச்சை பேசி அப்ளாஸ் வாங்கிய நடிகை ரோஜா - குலுங்கி சிரித்த முதல்வர்

x

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நடிகர் ரஜினி ஜெயிலர் படத்தில் பேசிய வசனத்தை மேற்கோள்காட்டி அமைச்சர் ரோஜா பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது. நகரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ரோஜா, சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் உள்ளிட்டோரை விமர்சித்தார். அப்போது, ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய குரைக்காத நாயுமில்ல, குறை சொல்லாத ஊருமில்ல என்ற வசனத்தை ரோஜா பேசினார். அதனைகேட்டு ரசித்த முதலமைச்சர் ஜெகன் மோகன், குலுங்கி குலுங்கி சிரித்த நிலையில், பொதுக்கூட்டத்தில் பலத்த வரவேற்பு கிடைத்தது.


Next Story

மேலும் செய்திகள்