பள்ளிவாசல்களில் வெளியே காத்திருந்து மாறி மாறி ஓட்டு கேட்ட திமுக-அதிமுக

x

ரம்ஜான் பண்டிகையையொட்டி, இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட நிலையில், பள்ளிவாசலில் இருந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் பல்வேறு கட்சி நிர்வாகிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஆரணியில் திமுக வேட்பாளர் தரணிவேந்தனுக்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள், இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து கூறியும், துண்டு பிரசுரம் வழங்கியும் வாக்கு சேகரித்தனர்..

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் பகுதியில், ரம்ஜானுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு திடலில் தொழுகை நடைபெற்றது. இதையடுத்து தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்..

இதே போல் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தரணிவேந்தன், அதிமுக வேட்பாளர் கஜேந்திரன், பாமக வேட்பாளர் கணேஷ்குமார் ஆகியோர் வந்தவாசியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது திமுக வேட்பாளர் தரணிவேந்தனும், பாமக வேட்பாளர் கணேஷ்குமாரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்தை பரிமாறி கொண்டனர்.

தேனியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்..


Next Story

மேலும் செய்திகள்