ராமேஸ்வரம் டூ காசி... அரசே அழைத்து செல்லும்.. - முந்துபவர்களுக்கே முன்னுரிமை

x

இராமேஸ்வரம் - காசி ஆன்மிகப் பயணத்தில், நடப்பாண்டு 300 நபர்கள் அழைத்து செல்லப்படவுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கடந்த 2022-23-ம் ஆண்டில் 50 லட்சம் செலவில் 200 நபர்கள் ஆன்மிகப் பயணம் செய்தனர். நடப்பாண்டில் 75 லட்சம் செலவில் 300 பேர் ஆன்மிகப்பயணம் செய்யவுள்ளதாக சட்டமன்ற அறிவிப்பு வெளியானது. தமிழ்நாட்டின் 20 மண்டலங்களில் இருந்து 300 பேர் அழைத்து செல்லப்படவுள்ள நிலையில், அதற்கான விண்ணப்பங்களை இந்துசமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்