இன்று ஊட்டி வருகிறார் ராகுல் காந்தி.. போலீஸ் வளையத்தில் நீலகிரி

x

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, இன்று தனது சொந்த தொகுதியான கேரள மாநிலம் வயநாடு செல்கிறார். இதற்காக, இன்று காலை விமானம் மூலம் கோவை வரும் அவர், காலை 11 மணியளவில், உதகை அருகே எல்லநள்ளி பகுதியில் உள்ள தனியார் விடுதியில், முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மாவை சந்தித்து தேநீர் அருந்துகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷை சந்திக்கிறார். இதையடுத்து, நீலகிரியில் ஹோம் மேட் சாக்லேட் தயாரிப்பு குறித்து கேட்டறிகிறார்.

பின்னர், கூடலூர் செல்லும் வழியில் முத்தநாடு பகுதியில், தோடர் பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களது கோயிலை பார்வையிடுகிறார். பின்னர், சாலை மார்க்கமாக வயநாடு செல்கிறார். ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு, நீலகிரியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்