பல மணி நேரம் காத்திருந்த சிறுவர்கள்...கண்டுகொள்ளாமல் சென்ற ராகுல்

x

தமிழக கேரளா எல்லையில் ரோஜா பூக்களுடன் பல மணி நேரம் காத்திருந்த சிறுவர்கள், ராகுல் காந்தி கண்டுக் கொள்ளாமல் சென்றதால், ஏமாற்றமடைந்தனர். வயநாடு செல்வதற்காக காரில் சென்ற ராகுல் காந்தியை வரவேற்க, பாட்ட வயல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காத்திருந்தனர். பல மணி நேரமாக ரோஜா பூக்களுடன் காத்திருந்த நிலையில், ராகுல் காந்தியின் கார் வந்த‌தும், கட்சி நிர்வாகிகள் ஓடிச்சென்று பேசினர். அவர்களிடம் மட்டும் ராகுல் காந்தி பேசிய நிலையில், அவரது வாகனம் புறப்பட்டு சென்றது. இதனால், அங்கு காத்திருந்த சிறுவர்கள் ராகுல்காந்தியை பார்க்க முடியாத‌தால் ஏமாற்றமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்