ராதிகா சரத்குமாரிடம் மனக்குமுறல்களை கொட்டித் தீர்த்த மக்கள்

x

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், சீமை கருவேலம் மரத்திலிருந்து கரி தயாரிக்கும் பெண் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை, முத்தாண்டியாபுரம், என்.சுப்பையாபுரம் பெரிய ஓடைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராதிகா சரத்குமார், சிந்துவம்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில், அங்கிருந்த பெண் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்