"மணிப்பூர் பற்றி எரிந்தபோதும் நேரில் செல்லாத பிரதமர்" - ராகுல்காந்தி கடும் சாடல்

x

அஸ்ஸாம் மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, சிவசாகர் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் பொதுமக்களுக்கு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான அநீதிகளை இழைத்து வருவதாக அப்போது அவர் தெரிவித்தார். மணிப்பூர் மாநிலத்தில் உள்நாட்டு போர் போன்ற சூழல் ஏற்பட்ட போதிலும் பிரதமர் மோடி. மணிப்பூருக்கு நேரில் செல்லவில்லை எனவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்