"பிரதமர் மோடியின் ஆன்மா இவர் வசம் உள்ளது"

x

அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புராணத்தில் வரும் ஒரு ராஜாவின் கதையை போல பிரதமர் மோடியின் ஆன்மா அதானியின் வசம் இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும் அரசியலில் அதானி தான் நம்பர் 1 எனவும், அவருக்கு அடுத்து தான் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா என்பதை தாங்கள் உணர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். பிரதமர் மோடியை பணியில் அமர்த்தியதே அதானி தான் என்பதை நாடு விரைவில் உணரும் என தெரிவித்த ராகுல், மோடி அதானிக்காக பணியாற்றிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். தங்கள் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களின் ஐபோன்களை ஹேக் செய்ய முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர், இத்தகைய செயல் குற்றவாளிகள் மற்றும் திருடர்களின் வேலை என விமர்சித்தார். பாரதிய ஜனதாவின் நிதி கட்டமைப்பு அதானியோடு நேரடியாக தொடர்பு கொண்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்