தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுக வேட்பாளர் வைத்த குற்றச்சாட்டு

x

தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுக வேட்பாளர் வைத்த குற்றச்சாட்டு

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் பொள்ளாச்சி நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆரோக்கியநாதர் வீதியில் உள்ள ஆதிசக்தி விநாயகா கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் அங்கிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவருடன் பொள்ளாச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன், நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக நகரப்பகுதியில் உள்ள மக்களை திமுக அரசு கண்டு கொள்ளவில்லை என குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்