``உங்களில் ஒருவனாக வந்திருக்கிறேன்'' - உருக்கமாக பேசிய ADMK வேட்பாளர் கார்த்திகேயன்

x

பொள்ளாச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன், தனது சொந்த ஊரான திவான்சாபுதூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சொந்த ஊரில் வேட்பாளர் கார்த்திகேயனுக்கு மக்கள் பட்டாசு வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். தொடர்ந்து மக்களிடம் பேசிய கார்த்திகேயன், உங்களில் ஒருவனாக இருக்கும் தன்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும், ஒரு பொது வேட்பாளராக நினைத்து வாக்களிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்


Next Story

மேலும் செய்திகள்