ஆட்டோ, ஆட்டோவாக அண்ணாமலையை தேடிய போலீஸ் - சென்னையில் பரபரப்பு

பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க கோரி சென்னையில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை போலீசார் ஆட்டோ, ஆட்டோவாக தீவிரமாக தேடியதாக கூறப்படுகிறது.
x

பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க கோரி சென்னையில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை போலீசார் ஆட்டோ, ஆட்டோவாக தீவிரமாக தேடியதாக கூறப்படுகிறது. போராட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து அண்ணாமலை அவரது காருக்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அருகில் இருந்த ஆட்டோவில் ஏறி தனது கார் இருக்கும் பகுதிக்கு சென்று அங்கிருந்து கமலாலயம் சென்றார். ஆனால் அவர் ஆட்டோவில் ஏறி கோட்டையை நோக்கி முற்றுகையிட செல்கிறார் என தவறான தகவல் பரவியது. இதையடுத்து போலீசார் நேப்பியர் பாலம் அருகே தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால் அண்ணமலை கோட்டை செல்கிறார் என்ற தகவல் தவறானது என பின்னர் தெரிய வந்ததால் குழப்பம் முடிவுக்கு வந்தது.


Next Story

மேலும் செய்திகள்