"மோடி வந்தால் ரேஷன் கடைகள், 100 நாள் வேலை இருக்காது..." - திருமாவளவன் பேச்சு

x

நாடாளுமன்ற தேர்தல், மக்களுக்கும் சங்பரிவார் கும்பலுக்கும் இடையே நடைபெறும் போர் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய விசிக தலைவர் திருமாவளவன், பாஜக ஆட்சி தொடர்ந்தால், நாட்டில் தேர்தல்களே நடக்காது என்றும் மாநில அரசுகள் கலைக்கப்படுவதுடன் குடியரசு தலைவர் ஆட்சி கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், திமுக கொண்டு வரும் திட்டங்களுக்கு அடிப்படை சமூக நீதியே என்றார். நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்